தலைப்புச் செய்தி

Wednesday, November 21, 2012

கசாப் தூக்கு கடைசிவரை ரகசியமாக வைக்கப்பட்டது ஏன்?


கசாப் தூக்கு கடைசிவரை ரகசியமாக வைக்கப்பட்டது ஏன்?மும்பை தாக்குதல் சம்பவத்தில் இன்று காலை தூக்கிலிடப்பட்ட அஜ்மல் கசாப் தூக்கிலிடப்படுவது பற்றி இறுதிநேரம் வரை நாள் பற்றிய ரகசியம் காக்கப்பட்டதாக மும்பையில் மராட்டிய முதல்வர் தெரிவித்துள்ளார்.

எனினும் முன்னதாகவே கசாப் தூக்கில் இடப்படும் விவரத்தை பாகிஸ்தானுக்கு தெரிவித்துவிட்டதாக அதிகாரிகள் கூறினர்.

தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது, அஜ்மல் கசாப்பை தூக்கிலிடும் தேதி குறித்து முடிவானது. ஆனால், அவரது தூக்கு தண்டனை நிறைவேற்றம் குறித்த தகவல் வெளியே கசியாமல் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டது. தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்ப்பதற்காக இந்த விவகாரத்தில் ரகசியம் காக்கப்பட்டதாக, மகாராஷ்டிர மாநில முதல்வர் சவான் தெரிவித்தார்.

இதையொட்டியே, இந்தியா வருகை தருவதாக இருந்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ரஹ்மான் மாலிக்கின் வருகையும் தவிர்க்கப்பட்டதாம்.


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "கசாப் தூக்கு கடைசிவரை ரகசியமாக வைக்கப்பட்டது ஏன்? "

Post a Comment