காஸ்ஸாவில் விமானத் தாக்குதலை நடத்தி அப்பாவி மக்களை கொலை செய்யும் இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு என்று துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான் கூறியுள்ளார். இஸ்தான்புல்லில் நடந்த யுரேஷியன் இஸ்லாமிக் கவுன்சில் மாநாட்டில் உரை நிகழ்த்தினார் அவர்.
அவர் தனது உரையில் கூறியது: 'ஸ்லாத்தை தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்துபவர்கள், முஸ்லிம்கள் கூட்டாக படுகொலை செய்யப்படும் போது கண்ணை மூடிக்கொள்கின்றார்கள். காஸ்ஸாவில் குழந்தைகள் கொலை செய்யப்படுவதை இவர்கள் கவனிப்பதில்லை. இஸ்ரேலின் செயல் யங்கரவாதமாகும். ஆகையால் தான் அந்நாட்டை பயங்கரவாத நாடு என்று நான் அழைக்கிறேன்' இவ்வாறு எர்துகான் கூறினார்.
0 comments: on "'இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு' என்கிறார் துருக்கி பிரதமர் எர்துகான்!"
Post a Comment