தலைப்புச் செய்தி

Sunday, June 3, 2012

பெட்ரோல் விலை ரூ.2 குறைந்தது: நள்ளிரவு முதல் அமல்


நாட்டின் வரலாறு காணாத அளவில் உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலை லீற்றருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் இந்த விலை அமலுக்கு வரும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.


பெட்ரோல் விலை சில நாட்களுக்கு முன்பு 1 லீற்றருக்கு ரூ.7.50 வரை அதிரடியாக ஒரே நாளில் உயர்த்தப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. பல்வேறு கட்சியினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.


இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வில் மாற்றம் இருக்கும் என்றும் கூறப்பட்டு வந்தது.


இதைத் தொடர்ந்து உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையில் ரூ.2 குறைக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. இப்புதிய விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "பெட்ரோல் விலை ரூ.2 குறைந்தது: நள்ளிரவு முதல் அமல்"

Post a Comment