தலைப்புச் செய்தி

Saturday, March 17, 2012

சல்மான் ருஷ்டி பங்கெற்கும் இந்தியா டுடே நிகழ்ச்சியில் பங்கேற்க அகிலேஷ் யாதவ் மறுப்பு!


லக்னோ:டெல்லியில் நடக்கவிருக்கும் இந்தியா டுடே கான்க்ளேவ்-2012 நிகழ்ச்சியில் உத்தரபிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் பங்கேற்கமாட்டார். பல்வேறு அதிகாரப்பூர்வ பணிகள் இருப்பதால் தன்னால் பங்கேற்க இயலாது என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
இதுக்குறித்து அவர் கூறியது:’இந்தியா டுடே’ நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு நேரமில்லை. அமைச்சரவை கூட்டம் இருக்கிறது. அரசு தொடர்பான முக்கிய தீர்மானங்களை எடுக்கவேண்டும். அந்நிகழ்ச்சியை விட எனக்கு முக்கியமானவை இவையாகும்’ என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி பங்கேற்கும் மாநாட்டில் கலந்துகொள்ள பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டனும், தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இன்று இந்தியா டுடேயின் 2 நாள் நிகழ்ச்சி துவங்குகிறது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "சல்மான் ருஷ்டி பங்கெற்கும் இந்தியா டுடே நிகழ்ச்சியில் பங்கேற்க அகிலேஷ் யாதவ் மறுப்பு!"

Post a Comment