தலைப்புச் செய்தி

Saturday, March 17, 2012

சங்கரன் கோவிலில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு


சங்கரன் கோவில் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிந்தது. நாளை மறுநாள்(மார்ச் 18) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.


இத்தொகுதிக்கான சட்டப் பேரவை உறுப்பினர் சொ.கருப்பசாமி கடந்த ஒக்டோபரில் மரணமடைந்ததையடுத்து இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதற்கான வேட்புமனு தாக்கல் பெப்ரவரி 22ம் திகதி தொடங்கி, 29ம் திகதி நிறைவு பெற்றது. வேட்புமனு பரிசீலனைக்குப் பின்பு, கடந்த 3ம் திகதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.


களத்தில் போட்டியிடுபவர்கள்: அதிமுக, தேமுதிக, திமுக, மதிமுக ஆகிய முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 13 பேர் போட்டியிடுகிறார்கள்.


இந்நிலையில் சங்கரன்கோவில் இடைத் தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. நாளை மறுநாள்(மார்ச் 18ஆம் திகதி) வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "சங்கரன் கோவிலில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு"

Post a Comment