தலைப்புச் செய்தி

Thursday, March 22, 2012

டைட்டானிக் நினைவுநாள் தபால்தலை வெளியீடு


டைட்டானிக் கப்பல் மூழ்கி நூறாண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி கனடாவில் புதிய தபால்தலைகள் வெளியிடப்படுகிறது.
கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் 15ம்  தேதி அன்று வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை ஒன்றில் மோதி டைட்டானிக் சொகுசுக் கப்பல் மூழ்கியது.
இந்த விபத்தில் கப்பலில் பயணம் செய்த 1500பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் டைட்டானிக் நினைவு நாள் எதிர்வருகிற ஏப்ரல் மாதத்தில் வர உள்ளது.
இதற்காக டைட்டானிக் கப்பல் பொறிக்கப்பட்ட 5 தபால் தலைகள் கனடாவில் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்வருகிற ஏப்ரல் 5ம் திகதி அன்று இந்த ஐந்து தபால்தலைகள் வெளியிடப்படும்.
இவற்றை டெனிஸ் பேஜ், ஆலிவர் ஹில் ஆகியோர் வடிவமைத்துள்ளனர்.
பிரிட்டனின் கௌதாம்ப்ட்டனிற்கும், ஹாலிஃபேக்சுக்கும் இடையில் டைட்டானிக் கப்பல் இருப்பதாக ஒரு தபால் தலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
கப்பலில் மூன்று புரொப்பெல்லர்களுக்கு (விரைவுக் காற்றாடிகள்) அடியில் கப்பல் பணியாளர்கள் இருப்பது போல மற்றொரு தபால்தலை அமைந்துள்ளது.
கேப் ரேஜ் என்ற கடல்முனையும் சௌதாம்ப்ட்டன் மற்றும் ஹால்மேக்சுக்கு இடையில் டைட்டானிக் கப்பல் நிற்பதுமான காட்சி ஒரு தபால்தலையில் காணப்படுகிறது.
இந்த கேப் ரேஜில் உள்ள வானொலி நிலையத்துக்குத் தான் டைட்டானிக் விபத்து குறித்த தகவல் முதலில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.



Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "டைட்டானிக் நினைவுநாள் தபால்தலை வெளியீடு"

Post a Comment