தெற்கு சூடானில் தொடர்ச்சியாக நடந்து வரும் உள்நாட்டு கலவரத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சூடானிலிருந்து பிரிந்து தெற்கு சூடான் என்ற புதிய நாடு உருவானது.
இந்நிலையில் அங்கு உள்நாட்டு கலவரங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதன் காரணமாக சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.





0 comments: on "தெற்கு சூடானில் தொடரும் கலவரம்: லட்சக்கணக்கில் மக்கள் பாதிப்பு"
Post a Comment