மும்பை:மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். இதனை மஹராஷ்டிர உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அஜ்மல் கசாப்பின் கருணை
இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7 சதவீதமாக உயரும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் 10வது பிரவசி பாரதிய திவாஸ்(Pravasi Bhartiya Divas) விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் நாட்டின் பொருளாதாரம் 7 சதவீதமாக உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது உள்நாட்டு உற்பத்தியால் உள்நாட்டு சேமிப்பு 33 முதல் 35 சதவீதம் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தைகளின் சரிவு காரணமாக இந்தியாவில் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தை எட்டவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
பண வீக்கத்தை கட்டுபடுத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். பிரவசி பாரதிய திவாஸ் விழாவில் சுமார் 60 நாடுகளைச் சேர்ந்த 1900 பேர் கலந்து கொண்டனர்.
0
comments:
on "இந்தியாவின் பொருளாதாரம் உயரும்: பிரதமர் நம்பிக்கை"
0 comments: on "இந்தியாவின் பொருளாதாரம் உயரும்: பிரதமர் நம்பிக்கை"
Post a Comment