தலைப்புச் செய்தி

Monday, January 2, 2012

புத்தாண்டு கொண்டாட்டம்: விஷசாராயம் குடித்து 8 பேர் பலி


இந்திய மாநிலமான ஆந்திராவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் விஷ சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த புத்தாண்டு கொண்டாட்ட விருந்தில் கலந்து கொண்டவர்கள் சாராயம் குடித்தனர்.


விஷசாராயம் குடித்தவர்களில் இரண்டு பெண்கள் உள்பட எட்டு பேர் பலியானார்கள். பத்திற்கும் மேற்பட்டவர்கள் நிலை கவலைக்கிடமாக உள்ளது.


பாதிக்கப்பட்டவர்கள் மேல் சிகிச்சைக்காக விஜயவாடா மற்றும் மயிலாவரம் அரசு வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாராயம் குடித்து எட்டு பேர் பலியான சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "புத்தாண்டு கொண்டாட்டம்: விஷசாராயம் குடித்து 8 பேர் பலி"

Post a Comment