தலைப்புச் செய்தி

Tuesday, December 27, 2011

ஹசாரேவின் போராட்டம் சட்ட விரோதமானது: மும்பை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்


இந்தியாவில் வலுவான லோக்பால் மசோதா அமைக்க கோரி அன்னா ஹசாரே நடத்தவிருக்கும் உண்ணாவிரத போராட்டம் சட்ட விரோதமானது என மங்கலேஷ்வர் திரிபாதி மும்பை நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இவர் உத்தர் பாரதிய விகாஸ் பரிஷத் அமைப்பின் தலைவர் ஆவார்.


அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, லோக்பால் மசோதா பற்றிய விவாதம் நடந்து கொண்டிருக்கையில் இந்த போராட்டம் மேற்கொள்வது சட்டத்தை மீறுவதற்கு சமமானதாகும். இதை அன்னா குழுவினர் அரசியல் ஆக்குகிறார்கள்.
மேலும் இந்த போராட்டத்தால் ஜனநாயகம் சீர்குலைந்து விடும் எனவும், இது போன்ற செயல்கள் நாட்டில் குழப்பத்தை விளைவிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஹசாரேவின் போராட்டம் சட்ட விரோதமானது: மும்பை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்"

Post a Comment