பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 26 பேர் பலியானார்கள். இதில் அவுரங்காபாத் மாவட்டத்தில் மட்டும் மின்னலுக்கு 19 பேர் பலியாகி உள்ளனர்.
இன்று பிஜுப்பூரில் 3 பேரும், கத்திகரில் 2 பேரும், ரோகத்ஸ் மற்றும் அர்வால் மாவட்டங்களில் தலா ஒருவரும் என 7 பேர் பலியாகி உள்ளதாக மாநில துயர் துடைப்பு துறை நிர்வாக செயலாளர் வயாசிஜி தெரிவித்து உள்ளார்.
மின்னல் தாக்கி பலியான 26 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.1 1/2 லட்சம் நிவாரண உதவித்தொகை அளிக்கப்படும் என்று முதல்-மந்திரி நிதிஷ்குமார் அறிவித்து உள்ளார்.





0 comments: on "பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 26 பேர் பலி"
Post a Comment