உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான அக்குழு நாளை ஸ்ரீநகர் செல்ல உள்ள நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் -ஜனநாயக கட்சித் தலைவர் மெஹ்பூபா முப்தி, காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் உண்மை நிலவரத்தை முதலமைச்சர் உமர் அப்துல்லா மூடிமறைக்க முயல்வதாக தெரிவித்துள்ளார்.
பதற்றம் நீடித்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவை திரும்ப பெற்று அனைத்துக்கட்சி குழு காஷ்மீர் வரும் நேரத்தில் மக்களின் கவனத்தை திசைத் திரும்ப உமர் அப்துல்லா முயல்வதாகவும் மெஹ்பூபா முப்தி குற்றம்சாற்றியுள்ளார். பிரச்சனையை தீர்க்க ஒரு பொதுவான செயல் திட்டத்துடன் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளையும் சிதம்பரம் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேச வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
பதற்றம் நீடித்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவை திரும்ப பெற்று அனைத்துக்கட்சி குழு காஷ்மீர் வரும் நேரத்தில் மக்களின் கவனத்தை திசைத் திரும்ப உமர் அப்துல்லா முயல்வதாகவும் மெஹ்பூபா முப்தி குற்றம்சாற்றியுள்ளார். பிரச்சனையை தீர்க்க ஒரு பொதுவான செயல் திட்டத்துடன் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளையும் சிதம்பரம் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேச வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
காஷ்மீர் மாநில அரசின் வழிகாட்டுதலின்படி செயல்படாமல் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் கருத்துக்களை அனைத்துக்கட்சி குழு அறிய வேண்டும் என்றும் மெஹ்பூபா முப்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
0 comments: on "காஷ்மீர் மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டும்! மெஹ்பூபா முஃப்தி"
Post a Comment