
கடந்த மே மாதம் அதிபர் தேர்தலில் ஈடுபட்டிருந்த சார்கோஸியை வெற்றிபெற விடாமல் தடுப்பதற்காக இந்தச் சதியை மறைமுகமாக இருந்து செயற்படுத்தியது அமெரிக்காவே என்று பிரான்சில் இருந்து வெளிவரும் எல் எக்ஸ்பிரஸ் எழுதியுள்ளது.
சார்கோஸிக்காக தேர்தல் பணியாற்றிக் கொண்டிருந்த முக்கிய பணியார்களின் கணினிகள் செயற்படாமல் ஸ்தம்பிதமடைய வைக்கப்பட்டு, தேர்தல் பணிகள் முடங்கின. மேலும் அதிபர் தேர்தலின் முதலாவது, இரண்டாவது கட்டங்களில் இந்த வைரஸ் தாக்குதல் மூலம் கணினிகள் முடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக அதிபருடைய கணினிப் பிரிவினர் மறுபடியும் இணைய வலையாக்கத்தை செம்மை செய்ய மூன்று தினங்கள் போராட வேண்டியிருந்துள்ளது.
அமெரிக்காவின் அதி உச்ச தொழில் நுட்பம் கொண்ட பிளம்ம என்ற தாக்குதல் நிகழ்ச்சித்திட்டத்தை ஆதாரமாகக் கொண்டு இந்தச் சதி வேலை நடாத்தப்பட்டுள்ளதாகவும் அப்பத்திரிகை கூறியுள்ளது.
இந்த நிலையில் பிரான்சின் இந்த குற்றச்சாட்டை அமெரிக்க அதிகாரிகள் மறுத்துள்ளார்கள்.
0 comments: on "அமெரிக்கா செய்த இணைய யுத்தம் "
Post a Comment