சங்கரன் கோவில் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8:00 மணியளவில் தொடங்கியது. இதுவரை ஐந்து சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப் பட்டுள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் முத்துச் செல்வி 29,840 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
திமுக வேட்பாளர் ஜவஹர் சூர்ய குமார் 9,806 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும் மதிமுக வேட்பாளர் 5697 வாக்குகள் பெற்று 3 வது இடத்திலும் உள்ளனர்.
தேமுதிக வேட்பாளர் முத்துக் குமார் 3,932 வாக்குகளும், பாஜக வேட்பாளர் எல்.முருகன் 603 வாக்குகளும் பெற்று வெற்றி இலக்கிலிருந்து வெகுதூரத்தில் உள்ளனர்.
ஐந்து சுற்று வாக்குகள் மட்டுமே எண்ணி முடிக்கப் பட்டுள்ள நிலையில் அதிமுக 20,034 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருப்பதால் எதிர்கட்சிகள்பெற்ற மொத்தவாக்குகளையும் கூட்டினாலும்கூட அதிகமுவின் வெற்றி வாய்ப்பை தட்டிப்பறிக்க முடியாது என்றே தெரிகிறது.
0 comments: on "தேமுதிகவுக்கு திராணி இல்லை, பாஜகவுக்கு பட்டை நாமம்..!"
Post a Comment