சங்கரங்கோவில் : வெல்லப் போவது யார்?
ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 760 வாக்காளர்கள் வாக்களித்த சங்கரன்கோவில் (தனி) சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் முடிவு இன்னும் சில மணித்துளிகளில் தெரிய உள்ளது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை, புளியங்குடியில் உள்ள ஸ்ரீ வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் இன்றுகாலை 8 மணிக்கு தொடங்கியது.
இந்த வாக்கு எண்ணிக்கை மொத்தம் 14 மேசைகளில் 18 சுற்றுகளாக எண்ணப்படும் என்றும் முழுமையாக ஒளிப்பதிவு செய்யப்படுவதாகவும் தேர்தல் அதிகாரி தெரிவித்தார். முதலில், தேர்தல் அதிகாரியின் அறையில், அஞ்சல் வாக்குகள் எண்ணப்படும்.
அதன் பிறகு30 நிமிட இடைவெளிக்கு பின், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும், பல்வேறு கணக்குச் சரிபார்ப்புகளுக்குப் பின்னரே சுற்று வாரியாக முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அதனால் முதல் முடிவு தெரிய இன்னும் சில மணித்துளிகள் ஆகலாம் என்றும் தெரிகிறது.
0 comments: on "சங்கரங்கோவில் : வெல்லப் போவது யார்?"
Post a Comment