தலைப்புச் செய்தி

Tuesday, March 20, 2012

சிறுநீர் கழித்தால் சுட்டே புடுவேன்: பரபரப்பை ஏற்படுத்திய எச்சரிக்கை சுவரொட்டி


தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் அனைத்து மகளிர்  போலீஸ்  நிலையம் உள்ளன.
இந்த பகுதியில் பேருந்து நிறுத்தம் உள்ளதால் பயணிகள் இந்த  போலீஸ்  அலுவலக சுவர்களுக்கு முன்பே சிறுநீர் கழிக்கின்றனர்.

இதைத் தடுக்க பலமுறை எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டும் தொடர்ந்து சிலர் இங்கு சிறுநீர் கழித்து வந்தனர்.

இதனால் பொறுமை இழந்த திருவண்ணாமலை  போலீஸ்  தற்போது விவகாரமான சுவரொட்டிகளை ஒட்டி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதில், சுட்டேபுடுவேன் இங்கு சிறுநீர் கழிக்காதீர் என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.

நிர்வாணமாக நிற்கும் ஒரு சிறுவன் கையில் துப்பாக்கி வைத்துக் கொண்டு உள்ளது போல் படம் வரையப்பட்டுள்ளது.
இதைப்பார்த்த திருவண்ணாமலை பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "சிறுநீர் கழித்தால் சுட்டே புடுவேன்: பரபரப்பை ஏற்படுத்திய எச்சரிக்கை சுவரொட்டி"

Post a Comment