தலைப்புச் செய்தி

Thursday, December 22, 2011

ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் தேதி, நாளை அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தர்காண்ட் ஆகிய மாநிலங்களில், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. ஒரே நேரத்தில், 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதால், இதை நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோட்டமாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதனிடையே, அனைவரின் கவனமும் உத்தரப் பிரதேசம் மீதே திரும்பியுள்ளது. அடுத்து யார் ஆட்சி அமைப்பது என்பதில், காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் இடையே, மும்முனைப் போட்டி நிலவுகிறது.


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் தேதி, நாளை அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன."

Post a Comment