மும்பை:மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். இதனை மஹராஷ்டிர உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அஜ்மல் கசாப்பின் கருணை
இந்தியாவில் ஊழலுக்கு எதிராக போராடும் அன்னா ஹசாரே குழுவின் உறுப்பினரான அரவிந்த் கெஜ்ரிவாலின் இராஜினாமாவை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் வருவாய்துறை உதவி ஆணையராக பணியாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 2006 ம் ஆண்டு தனது இராஜினாமா கடிதத்தை அளித்தார். ஆனால் வருமான வரி பாக்கியாக ரூ.9,27,787 செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதன் காரணமாக அவரது இராஜினாமா ஏற்று கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் கடந்த 6 வருடங்களுக்கு பின் மத்திய அரசு இராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளது. அவர் மீதான பிரச்சினைக்கு தீர்வாக ரூ.9 இலட்சம் செலுத்திய 45 நாட்களுக்கு பிறகே அவரது இராஜினாமா ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0
comments:
on "அரவிந்த் கெஜ்ரிவால் வருமான வரி பாக்கியாக ரூ.9,27,787 செலுத்த வேண்டும்"
0 comments: on "அரவிந்த் கெஜ்ரிவால் வருமான வரி பாக்கியாக ரூ.9,27,787 செலுத்த வேண்டும்"
Post a Comment