தலைப்புச் செய்தி

Saturday, September 17, 2011

மதநல்லிணக்க உண்ணாவிரதம்:நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா ஆதரவு

சமூக நல்லிணக்கத்தை பலப்படுத்தும் வகையில் 3 நாள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக நரேந்திர மோடி அறிவித்துள்ளார். காந்தி நகர் குஜராத் பல் கலைக்கழக மைதானத்தில் இன்று (17-ந்தேதி) காலை உண்ணாவிரதத்தை தொடங்குகிறார்.


3 நாட்கள் நடைபெறும் இந்த உண்ணாவிரதத்தில் மோடியுடன் பாரதீய ஜனதா கட்சி பொதுச்செயலாளர் விஜய்கோயல் பங்கேற்க போவதாக அறிவித்து இருந்தார். இந்த நிலையில் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, சுஷ்மாசுவராஜ், அருண்ஜெட்லி, ராஜ்நாத் சிங், அனந்தகுமார், ரவி சங்கர் பிரசாத், ராஜீவ் பிரதாப் ரூடி, ஷாநவாஸ் உசைன் ஆகியோரும் பங்கேற்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.


மேலும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா ஆதரவு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அதிமுக எம்பிக்கள் மைத்ரேயன், தம்பிதுரை ஆகியோர் நரேந்திர மோடியை அகமதாபாத்தில் சந்தித்து ஜெயலலிதாவின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "மதநல்லிணக்க உண்ணாவிரதம்:நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா ஆதரவு"

Post a Comment