தலைப்புச் செய்தி

Tuesday, August 2, 2011

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் குண்டுவெடிப்பு- 5 பேர் பலி

இம்பால்: மணிப்பூரில் நடந்த குண்டுவெடிப்பில், 5 பேர் பலியாகினர். 20 பேர் படுகாயமடைந்தனர்.

மணிப்பூர் மாநிலம், இம்பாலில் உள்ள சங்கப்சப்பம் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சந்தை பகுதி உள்ளது. இங்கு இன்று மதியம் 2.15 மணியளவில் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டர் ஒன்றில், வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு அதிக சத்தத்துடன் வெடித்தது.

இதில் அந்த பகுதியில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த 20 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்த அம்மாநில முதல்வர் ஓக்ராம் இபோபி சிங், பார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, தகுந்த விசாரணை நடத்த கேட்டுக் கொண்டார். 

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "மணிப்பூர் தலைநகர் இம்பாலில் குண்டுவெடிப்பு- 5 பேர் பலி"

Post a Comment