தலைப்புச் செய்தி

Tuesday, August 2, 2011

கஷ்மீரில் 1500 அரை விதவைகள்


ஸ்ரீநகர்:ஜம்முகஷ்மீர் மாநிலத்தில் காணாமல் போன நபர்களின் மனைவிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது. காணாமல் போனவர்களின் பாதுகாவலர்களின் அமைப்பான எ.பி.ஸி.பி விரிவான ஆய்விற்கு பிறகு இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
பாதி விதவைகளாகவும், பாதி மனைவிகளாகவும் (அதாவது காணாமல்போன தனது கணவர் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்பதை தெரியாமலேயே வாழ்வதுதான் அரை மனைவி-அரை விதவை என்பது)வாழும் பெண்களின் பாதுகாப்பற்ற சூழல் குறித்து கூறுகிறது இவ்வறிக்கை.
இத்தகைய 1500 அரை விதவைகள் கஷ்மீரில் வாழ்வதாக அறிக்கை கூறுகிறது. காணாமல்போனவர்களின் மனைவிகளும், மக்களும் அனுபவிக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வுக்குறித்தும் அறிக்கையில் பரிந்துரைகள் கூறப்பட்டுள்ளன.
காணாமல் போனவர்கள் உயிரோடு வாழ்கின்றார்களா? அல்லது மரணித்துவிட்டார்களா? என்பதை குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவிக்கவேண்டும். அரை விதவைகளுக்கு இழப்பீடு வழங்குதல், இவர்களின் வழக்குகளை துரிதப்படுத்த சிறப்பு உயர்நீதிமன்ற பெஞ்ச் உருவாக்குதல், நிர்பந்தமாக காணாமல்போகும் சம்பவத்திற்கு எதிராக சிறப்பு சட்டம் கொண்டுவருதல், தற்போதைய பாதுகாப்பு சட்டங்களில் திருத்தம் கொண்டுவருதல் ஆகிய பரிந்துரைகளும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளன.
Thanks@thoothu

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "கஷ்மீரில் 1500 அரை விதவைகள்"

Post a Comment