தலைப்புச் செய்தி

Monday, May 9, 2011

அண்ணா ஹசாரேவுக்கு எதிராக வழக்கு


பிரபல ஊழல் எதிர்ப்புவாதியான அன்னாஹசாரே நடத்தி வரும் அறக்கட்டளையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அதுபற்றி விசாரணை நடத்தக்கோரி அன்னாஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 புனேயைச் சேர்ந்த ஹேமந்த் பாட்டீல் என்ற சமூக சேவகர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ள மனுவில்,அண்ணா ஹசாரேவும், அவர் நடத்தி வரும் அறக்கட்டளையும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை கோடை விடுமுறைக்கு பின்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அண்ணா ஹசாரேவுக்கு எதிராக வழக்கு"

Post a Comment