தலைப்புச் செய்தி

Sunday, February 6, 2011

ஜெர்மன் வங்கியில் இந்தியர்களின் கறுப்புப்பணம்! 15 பேரின் பட்டியலை வெளியிட்ட இந்திய பிரபல புலனாய்வு இதழ்

ஜெர்மனியின் லீச்டென்ஸ்டெய்ன் வங்கியில் கறுப்புப் பணம் பதுக்கியுள்ள 18 இந்தியர்களின் பட்டியலை அந்த வங்கி இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது.


அவர்களின் பெயர்களை மத்திய அரசு வெளியிடாத நிலையில், பிரபல புலனாய்வு பத்திரிகையான தெஹல்கா அதிரடியாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கறுப்பு பணத்தை வைத்துள்ளவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே கேட்டுக்கொண்ட பிறகும் கூட, அந்தப் பட்டியலை வெளியிட முடியாது என்றும் பட்டியலை வெளியிடுவதில் சட்ட சிக்கல், அயலுறவுப் பிரச்சினை உள்ளதாகவும் பிரணாப்முகர்ஜி கூறிவந்தார்.

இந்நிலையில் ஜெர்மன் நாட்டில் உள்ள எல்.ஜி.டி. வங்கியில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்களின் 18 பேரின் பெயர்கள் அடங்கிய ரகசிய பட்டியலை ஜெர்மன் அரசாங்கம் சமீபத்தில் வெளியிட்டது.

இந்த விவரம் சீலிடப்பட்ட கவரில் வைத்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் அந்தப் பட்டியலை எப்படியோ பெற்றுவிட்ட தெஹல்கா, 18 பேரில் 15 பேரின் பெயர்களை வெளியிட்டுள்ளது.

அந்த 15 'கறுப்பு' இந்தியர் விவரம்:

1.மனோஜ் துபுலியா

2.ருபால் துபுலியா

3.மோகன் துபுலியா

4.ஹஸ்முக்காந்தி

5.சிந்தன்காந்தி

6.திலீப் மேத்தா

7.அருண் மேத்தா

8.அருண் கோசார்

9.குன்வாந்தி மேத்தா

10.ரஜினிகாந்த் மேத்தா

11.பிரபோத் மேத்தா

12.அசோக் ஜெபுரியா

13.ராஜ் பவுண்டேசன்

14.ஊர்வசி பவுண்டேசன்

15.அம்பூர்வனா அறக்கட்டளை

இந்தப் பட்டியலில் இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவன அதிபர் ஒருவரும் உள்ளதாகவும், அனைத்தையும் உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே அவர் பெயரை வெளியிட உள்ளதாகவும் தெஹல்கா கூறியுள்ளது.

விரைவில் முமுப் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்தப் பட்டியல் இந்திய அரசுக்கு இரு ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 2011-ம் ஆண்டே கிடைத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஜெர்மன் வங்கியில் இந்தியர்களின் கறுப்புப்பணம்! 15 பேரின் பட்டியலை வெளியிட்ட இந்திய பிரபல புலனாய்வு இதழ்"

Post a Comment