தலைப்புச் செய்தி

Monday, January 31, 2011

குடிபோதையில் இருக்கும் டிரைவரை காட்டிக் கொடுக்கும் சூப்பர் கார்

தற்போது மது அருந்தி விட்டு குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதனால் விபத்துகள் அதிகரித்து பலரின் உயிர்கள் பறிபோகின்றன. அதை தடுக்கும் வகையில் புதிய வகை சூப்பர் கார் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த கார் குடிபோதையில் இருக்கும் டிரைவரை கண்டுபிடித்து தருகிறது. இந்த அதிநவீன காரில் மனித உடலின் உணர்வுகளை பதிவு செய்யக் கூடிய கருவி பொருத்தப்பட்டுள்ளது. டிரைவரின் மூச்சுக் காற்று, அல்லது தோல் பகுதியின் உணர்வு மூலம் டிரைவர் குடிபோதையில் இருக்கிறாரா? என்பதை கண்டறிய முடியும்.


இது தவிர காரின் சக்கரங்களை இயக்க கூடிய ஸ்டீயரிங், மற்றும் கதவு பூட்டுகளிலும் பொருத்தலாம். அதன் மூலம் டிரைவரின் ரத்தத்தில் கலந்து இருக்கும் ஆல்கஹாலின் விகிதத்தை கண்டறிந்து அவர் போதையில் உள்ளாரா? என கண்டறிய முடியும்.குடிபோதையில் இருப்பது தெரிந்தால் காரை ஓட்ட அந்த டிரைவரை அனுமதிக்காமல் வேறு ஒருவரை ஓட்ட செய்யலாம். இந்த கார் வெள்ளோட்ட சோதனை நடந்தது. அமெரிக்காவில் உள்ள வால்கம் நகரில் நடந்த இந்த சோதனை ஓட்டத்தை அமெரிக்க போக்குவரத்து செயலாளர் ராய் லாகூட் நேரில் வந்து பார்த்தார்.

இக்காரை தயாரித்த நிபுணர்களை அவர் வெகுவாக பாராட்டினார். இந்த புதிய முயற்சிக்கு மக்களிடையே வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளது. இது போன்ற காரை புழக்கத்தில் விடவேண்டும். இதன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படும் என தெரிவித்துள்ளனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "குடிபோதையில் இருக்கும் டிரைவரை காட்டிக் கொடுக்கும் சூப்பர் கார்"

Post a Comment