தலைப்புச் செய்தி

Saturday, January 15, 2011

அஜீரணம் ஆவதற்கு அடிப்படைகாரணங்கள் மூன்று.

1. உடல் ஒவ்வாமை.


2. உணவு ஒவ்வாமை.

3. பழக்க வழக்க தவறுகள். சிலருக்கு சில உணவுகள் இயல்பாகவே ஒத்துக் கொள்ளாது. அவற்றைச் சாப்பிடு வதாலும் அஜீரணம் ஏற்படலாம். பிடித்த உணவுகளை நேரம் தவறியோ, அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலோ ஜீரண உறுப்புகள் சரிவர இயங்க முடியாமல் அஜீரணத்தை ஏற்படுத்தும். எனவே நமது பழக்க வழக்கங்களை சரிப்படுத்திக் கொண்டாலே அஜீரணத்தை தடுத்துவிடலாம்.


மேலும் சில விஷயங்கள்:

* பசித்த பிறகே உணவு உண்ண வேண்டும்.

* எப்போதும் அளவோடு சாப்பிட வேண்டும்.

எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளையே உண்ண வேண்டும்.

*கொழுப்புச் சத்துள்ள உணவுப் பொருட்களை அளவோடு சேர்க்க வேண்டும்.

* இரவு உணவை குறைவாக உண்ண வேண்டும்.

* உணவுக்குப் பின் சிறிது தூரம் நடக்க வேண்டும்.

* தினமும் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

* கோபம், மன இறுக்கம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும்.

*தொலைக்காட்சி பார்த்துக் கொண்டோ, பேப்பர் படித்துக் கொண்டோ சாப்பிடக் கூடாது.

* உடலுக்கு ஒவ்வாத உணவுகளை சாப்பிடக் கூடாது.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அஜீரணம் ஆவதற்கு அடிப்படைகாரணங்கள் மூன்று."

Post a Comment