தலைப்புச் செய்தி

Monday, January 31, 2011

உத்தரபிரதேசத்தில் இளம் பெண் காரில் கடத்தி கற்பழிப்பு; மந்திரி உறவினர் கைது

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் 25 வயது இளம் பெண் ஒருவர் காரில் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டார்.


இதுபற்றிய விவரம் வருமாறு:-

டெல்லியை சேர்ந்த 25 வயது இளம் பெண். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான்இவருக்கு காதல் திருமணம் நடந்தது.

வேலை விஷயமாக இவர் காசியாபாத்துக்கு சென்றார். அந்த பெண்ணின் பெண் நண்பர் 4 பேரை அறிமுகப்படுத்தி வைத்தார்.

அந்த 4 பேரும் அந்த பெண்ணை காரில் அழைத்து சென்று வேலை வாங்கி தருவதாக கூறினர். இதை அவரும் நம்பினார். ஆனால் அந்த 4 பேரும் அவரை காரில் கடத்தி சென்று ஓடும் காரில் கற்பழித்தனர்.

அதில் ஒருவன் சத்தம் போடாமல் இருக்க துப்பாக்கியால் மிரட்டியுள்ளான். அந்த பெண்ணை கற்பழித்த பிறகு வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்று மிரட்டி விட்டு தப்பி சென்றனர். அவர் டெல்லி சென்று நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தார்.

போலீசார் தீவிர விசாரணை நடத்தி 2 பேரை கைது செய்து உள்ளனர். இதில் ஒருவன் பெயர் சுனில் கியாசி. இவன் மந்திரியின் உறவினர் ஆவார்.

மற்றொருவன் பெயர் பாபி இவன் பிரபல டாக்டர் ஒருவரின் மகன் சஞ்சய்சவுத்ரி, அஸ்லம் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "உத்தரபிரதேசத்தில் இளம் பெண் காரில் கடத்தி கற்பழிப்பு; மந்திரி உறவினர் கைது"

Post a Comment