தலைப்புச் செய்தி

Monday, November 15, 2010

நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் – ஆப்கான் அதிபர்

ஆப்கானிஸ்தானில் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் இராணுவ நடவடிக்கைகளை குறைக்கும் காலம் அமெரிக்காவுக்கு வந்து விட்டது என ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் போஸ்ட்க்கு அவர் அளித்த பேட்டியில், விசேஷ படைகளால் இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும், ஏனென்றால் அவை ஆப்கானிஸ்தான் மக்களை கோபப்படுத்துவதோடு, கிளர்ச்சிக்கு அவை ஆதரவை கொடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த இரவு நேர நடவடிக்கைகளை அமெரிக்க ஜெனரல் டேவிட் பெட்ரயஸ் வரவேற்று அவை மிகவும் தேவை என குறிப்பிட்டு இருந்தார். இதை எதிர்த்து ஆப்கானிஸ்தான் அதிபர் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலதிகமாக முப்பதாயிரம் துருப்புகளை பணியில் ஈடுப்படுத்தியிருப்பது கிளர்ச்சியை குறைத்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் – ஆப்கான் அதிபர்"

Post a Comment