தலைப்புச் செய்தி

Saturday, September 18, 2010

எச்சரிக்கை ! எச்சரிக்கை !! எச்சரிக்கை !!!

அன்பு சகோதரர்களே....அஸ்ஸலாமு அழைக்கும்

வருகின்ற 24 .09 .2010 வெள்ளி கிழமையன்று பாபர் மசூதி வழக்கின் முக்கிய தீர்ப்பு வருகிறது இதில் யாருக்கு சாதக பாதகமாக இருந்தாலும் பாதிப்பு என்பது இஸ்லாமியராக இருக்கும் நமக்குத்தான் என்பதை கடந்த கால சம்பவங்களில் நாம் கண் கூடாக கண்ட மறுக்க/மறைக்க முடியாத உண்மையாகும் .

ஆனால் இந்த தீர்ப்பு நமக்குசாதகமா பாதகமா என்பது இறைவன் ஒருவனுக்கே வெளிச்சம் (இறைவனிடத்தில் துஆ செய்ய வேண்டியது முக்கியம்) ஆனாலும் இந்த தீர்ப்புக்கு பின் ஒருக்கால் பிரச்சனை என்று வருமேயானால் வரக்ககுடிய விளைவுகளை எதிர் கொள்ள நாம் தயாராக இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும் .

இந்த தருணத்தில் நமக்கு நாமே பிரச்சனைகளை வளர்த்தும் இயக்கம் பார்த்துக்கொண்டும் அவன்தானே இவன் தானே என்று பாராமல் நாம் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே நாம் இது போன்ற சமுக பிரச்சனைகளில் வெற்றிகாண இயலும் .

மேலும் இந்த தீர்ப்பானது வெள்ளிக்கிழமையன்று வழங்குவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது இந்த தருணத்தில் நமக்கு எச்சரிக்கை தேவை . இந்த தினத்தன்று நமது பெண்களை குறைந்தது சில நாட்களுக்கு வெளியிடங்களுக்கு செல்லாமலும் பள்ளி செல்லும் பெண்பிள்ளைகளை இஸ்லாமியர் அல்லாத தனது தோழியர் வீடுகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி நம்மை நாமே தற்காத்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம் என்பதையும் கவத்தில் கொண்டு நாம் ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றி பிடித்து இறைவனிடம் பிரார்த்தனை செயுங்கள் நிச்சயம் இறைவைனின் உதவி கிடைக்கும் என்பதில் ஐயமில்லை !

ஜிஹாதிலேயே உயர்ந்தது அநியாயக்காரனின் முன்னிலையில் நியாயத்தை எடுத்துக் கூறுவதாகும்"


-நபி மொழி
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "எச்சரிக்கை ! எச்சரிக்கை !! எச்சரிக்கை !!!"

Post a Comment