தலைப்புச் செய்தி

Wednesday, December 26, 2012

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மகள்கள் "ஃபேஸ் புக்" பயன்படுத்த தடை!


பெண் பிள்ளைகளையும் "ஃபேஸ்புக்"கில் கணக்கு துவங்க அனுமதிக்க மாட்டேன், அவர்கள் "வேறு பெயர்களில்" ஃபேஸ்புக் பயன்படுத்துவதற்கும் "தடை" விதிக்கப்பட்டுள்ளது, என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.
ஒபாமாவின் மூத்த மகள் மாலியா (14), இளைய மகள் ஸாஷா (12).
இவர்களிடம் அறிமுகமில்லாத யாரும் நட்புக்கொள்வதை, தாம் விரும்பவில்லை.
எனவே, அவர்கள் ஃபேஸ்புக்கை பார்வையிடவும் - பயன்படுத்தவும் - கணக்கு துவங்கி பிறருடன் நட்புக்கொள்ளவும் "தடை" விதித்துள்ளேன்.
அவர்கள், வேறு பெயர்களில் ஃபேஸ்புக்கில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதையும் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
எந்நிலையிலும் அவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டேன்.
இந்த தடை, குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியாகும் வரை நீடிக்கும் என்றார்.
ஒபாமாவின் இந்த கட்டுப்பாடுகளுக்கு அமெரிக்க பெண்ணியவாதிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குறிப்பு:
பெண் சுதந்திரம் பற்றி வாய்க்கிழிய பேசும் அமெரிக்காவில், அதன் அதிபர் பொறுப்பிலிருப்பவரே, தன் மகள்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளபோது, பெண்களை கண்ணியமாக பாதுகாக்க வேண்டிய முஸ்லிம் சமூகத்தினர், தன் பிள்ளைகள் விஷயத்தில்பொறுப்பை உணர்ந்து செயல்படுவது அவசியம்.


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மகள்கள் "ஃபேஸ் புக்" பயன்படுத்த தடை!"

Post a Comment