தலைப்புச் செய்தி

Tuesday, June 5, 2012

அசாமில் வெள்ளப்பெருக்கு: 30 கிராமங்கள் தத்தளிப்பு


இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் அசாமில் கடந்த 2 நாட்களாகப் பெய்து வரும் கன மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி, 30 கிராமங்கள் தத்தளிக்கின்றன.
அசாமின் உதால்குரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாகப் பெய்து வரும் கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


இதன்காரணமாக 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பள்ளிகளிலும், உயரமான பகுதிகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, ஏராளமான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 30 கிராமங்கள் நீரில் தத்தளிக்கின்றன.


மழை - வெள்ளம் காரணமாக, உதால்குரி மாவட்டத்தில் உள்ள தொலை தூரப் பகுதியான பேர்கானுக்குச் சாலை வசதி துண்டிக்கப்படுள்ளது. வெள்ள நிலைமையை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருகிறது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அசாமில் வெள்ளப்பெருக்கு: 30 கிராமங்கள் தத்தளிப்பு"

Post a Comment