தலைநகர் லக்னெளவில் நடந்த இந்தச் சந்திப்பின்போது, மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களைச் செயற்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர்.
இந்தத் தகவலை சமாஜ்வாடி கட்சித் தலைவர் அனுப்ரியா படேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பில்கேட்ஸ் - அகிலேஷ் சந்திப்புக்கு முன்னதாகவே, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை உறுப்பினர்களும் மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகளும் பேச்சு நடத்தியிருந்தனர்.
போலியோ ஒழிப்பு, பிற நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் பங்கெடுத்துக் கொள்வதற்கு பில் கேட்ஸ் ஆர்வம் காட்டியதாகத் தெரிகிறது.
குறைப் பிரசவ சிகிச்சை, பிரசவ கால சிகிச்சை, ஊட்டச்சத்து, குடும்பக் கட்டுப்பாடு, குழந்தைகள் நலம் ஆகியவை அடங்கிய ஐந்து அம்சத் திட்டத்தை பில்கேட்ஸின் அறக்கட்டளை உத்தரப் பிரதேசத்தில் செயல்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. |
0 comments: on "பில்கேட்ஸ்-அகிலேஷ் சந்திப்பில் முக்கிய திட்டங்கள் அறிமுகம்"
Post a Comment