தலைப்புச் செய்தி

Monday, October 31, 2011

இரண்டு பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவிகளை எஸ்.டி.பி.ஐ கைப்பற்றியது


Add caption

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் புலாங்குடியிருப்பு பேரூராட்சியில் துணை தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சியைச்சார்ந்த நாகூர் மைதீன் வெற்றிப்பெற்றார். 15 உறுப்பினர்களைக்கொண்ட பேரூராட்சியில் ஒன்பது வாக்குகளை நாகூர் மைதீனும், காங்கிரஸ் கட்சியைச்சார்ந்த திவான் ஆறுவாக்குகளும் பெற்றனர். 


தூத்துக்குடி மாவட்டத்தில் மூலக்கரை கிராமபஞ்சாயத்தில் துணைத்தலைவர் பதவி எஸ்.டி.பி.ஐக்கு கிடைத்துள்ளது.மெளலவி அஷ்ரஃப் அலி ஃபைஸி துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆல் இந்தியா இமாம் கவுன்சில் தமிழ்நாடு துணைத்தலைவராக உள்ளார் அஷ்ரஃப் அலி ஃபைஸி. தமிழக உள்ளாட்சிகளுக்கு நடந்த தேர்தலில் எஸ்.டி.பி.ஐ 62 இடங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "இரண்டு பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவிகளை எஸ்.டி.பி.ஐ கைப்பற்றியது"

Post a Comment