தலைப்புச் செய்தி

Saturday, September 10, 2011

உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மூன்று குண்டுவெடிப்பு தாக்குதல்-ப. சிதம்பரம்

மத்திய உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற குண்டு வெடிப்புகளின் கராணமாக தனது கெüரவத்தை இழக்க நேர்ந்தது என்று ப. சிதம்பரம் தெரிவித்தார்.



தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:



]நான் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மூன்று வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இவை என் பெயருக்கு ஏற்பட்ட களங்கம் ஆகும். இதுபோன்று மற்ற அரசுகளின் 
பெயர்களுக்கும் கூட களங்கம் ஏற்பட்டுள்ளன.



ஆமதாபாத்: தில்லி குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தீவிரவாதிகள் அனுப்பிய மூன்றாவது மின்னஞ்சலில் ஆமதாபாத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதை அனுப்பியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.



குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையை மத்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. உளவுத் துறையின் விசாரணைத் தகவல்கள் தில்லி காவல் துறையினருடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.



புனே குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணை முடிந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தீவிரவாதத்தின் பிடியிலிருந்து நாட்டு மக்களை நாங்கள் நிச்சயம் காப்போம் என்று சிதம்பரம் தெரிவித்தார்.


இந்த இமெயில்கள் மற்றும் தடயவியல் பரிசோதனை முடிவுகள்  ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக அமைந்துள்ளது . பாஜக ஆளும் மாநிலமான குஜராத்தின் காந்திநகர் பகுதியில் ஒரு தடயவியல் சோதனை கூடமும் மற்றொன்று ஹைதராபாத்திலும் தான் இருக்கிறது. அதேபோல பி.எஸ்.என்.எல் தொலைபேசி மற்றும் இணையதள சேவை மையத்தின் முக்கிய அலுவலகமும் பாஜக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கர்நாடகத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மூன்று குண்டுவெடிப்பு தாக்குதல்-ப. சிதம்பரம்"

Post a Comment