தலைப்புச் செய்தி

Thursday, August 4, 2011

காந்தி சிலையை உடைத்து ஹிந்துத்துவாவினர் அராஜகம்!

கோயம்புத்தூர்: ஆர்.எஸ்.புரம் காந்தி பார்க்கில் அமைந்துள்ள காந்தி சிலையை ஹிந்துத்துவ அமைப்பான பாரதீய சேனாவை சேர்ந்த பயங்கரவாதிகள் உடைத்தனர். 

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஹிந்துத்துவ அமைப்பான பாரதீய சேனாவின் பொதுச்செயலாளர் சுரேஷ்ராஜன்(வயது 37) இன்னொரு தலைவரான மின்னல் நாகராஜ்(வயது 47) ,

ஆகியோரை கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் போலீஸ் கைது செய்தது. பாபா ராம்தேவை கைதுச் செய்த சம்பவத்தை கண்டித்து காந்திசிலையை உடைத்ததாக சிலையை உடைத்த பிறகு குற்றவாளிகள் சம்பவ இடத்தில் வீசிச்சென்ற துண்டுபிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சிந்திக்கவும்: காந்திஜி சுதந்திரம் கேட்டு போராட்டம் நடத்தும் போது இந்த ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் வெள்ளையர்களோடு சேர்ந்து சுதந்திர போராட்ட வீரர்களை காட்டி கொடுத்தார்கள். முஸ்லிம்கள் தங்களது இந்தியாவின் சுதந்திரத்திற்க்காக வேண்டி தங்களது விகிதாச்சரத்துக்கும் அதிகமாக போராடி உயர்நீத்தனர், சிறை சென்றனர். அது மட்டும் அல்லாமல் வெள்ளையர்கள் மீது கொண்ட வெறுப்பினால் ஆங்கிலம் வெள்ளையர்களின் பாஷை அதை கற்றுக்கொள்வது ஹராம் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டது என்று கூறி ஆங்கிலம் கற்றுக் கொள்ளாததனால் ஒரு நூற்றாண்டு காலம் பின்னோக்கி போனார்கள்.

ஆனால் இந்த பார்பன ஹிந்துத்துவாவோ வெள்ளையர்களுக்கு சாமரம் வீசி தங்களை வளர்த்து கொண்டார்கள். கடைசியாக காந்திஜியை ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி நாதுராம் கோட்சே துப்பாக்கியால் சுட்டு கொன்றான். பாவம் அந்த நல்லவரும் ராம் ராம் என்று சொல்லி மரணித்து போனார். காந்திஜியை கொன்றதற்காக ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம் தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னாளில் மீண்டும் ஹிந்துத்துவா ஆதரவு படைத்த சில அரசியல், மற்றும் நீதி துறை கயவர்களால் அவர்கள் தடை நீக்கப்பட்டு மீண்டும் இந்தியாவில் கலவரங்களை நடத்தி வருகிறார்கள்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "காந்தி சிலையை உடைத்து ஹிந்துத்துவாவினர் அராஜகம்!"

Post a Comment