தலைப்புச் செய்தி

Saturday, July 30, 2011

தி.மு.க. கூட்டணியை விட்டு திருமாவளவனும் விலகுகிறார்!

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேராமல், மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்பது எங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய யோசனை. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடமும் அதுபற்றி பேசியிருக்கிறேன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமா வளவன் கூறியுள்ளார்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்கக்கோரி உலகத் தமிழர்களின் கையெழுத்து பெறும் இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கையெழுத்துகளை வாங்கி அவற்றை ஐ.நா. சபைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் இயக்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம், விடுதலை சிறுத்தை கட்சியின் தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் பழனிமுத்து தலைமையில் வெள்ளிக் கிழமையன்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியது வருமாறு:

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேராமல், மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்பது எங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய யோசனை. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடமும் அதுபற்றி பேசியிருக்கிறேன்.

தற்போது என்னுடைய எண்ணத்தின்படி, பா.ம.க. தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. ராமதாசின் இந்த முடிவை வரவேற்கிறேன். ராமதாஸ் அழைப்பு விடுத்தால், எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்து, பா.ம.க. அணியில் சேர்வது பற்றி முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "தி.மு.க. கூட்டணியை விட்டு திருமாவளவனும் விலகுகிறார்!"

Post a Comment