தலைப்புச் செய்தி

Saturday, July 30, 2011

ராணுவத்தின் மூத்த அதிகாரியாக இருந்தவர் ஜெனரல் அப்துல் பதாயூனஸ் துப்பாக்கியால் சுட்டனர்


லிபியாவில் அதிபர் கடாபியின் ராணுவத்தின் மூத்த அதிகாரியாக இருந்தவர் ஜெனரல் அப்துல் பதாயூனஸ். தற்போது இவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்களின் படை கமாண்டராக இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று அவர் பெங்காசி நகருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழி மறித்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். எனவே அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இந்த தகவலை கிளர்ச்சியாளர்களின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ளது. அவரது மரணத்தை தொடர்ந்து பெங்காசி பகுதியில் 3 நாள் துக்கம் கடைபிடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே யூனுசை கடாபியின் ராணுவத்தினர் நேற்று கைது செய்து அழைத்து சென்று சுட்டுக் கொன்றதாக வதந்திகள் பரவின. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ராணுவத்தின் மூத்த அதிகாரியாக இருந்தவர் ஜெனரல் அப்துல் பதாயூனஸ் துப்பாக்கியால் சுட்டனர்"

Post a Comment