தலைப்புச் செய்தி

Sunday, May 8, 2011

இதயம் காக்கும் பழக்கலவை

ஆரோக்கியமான இதயத்துடன் வாழ பழ கலவைகள் உதவுகின்றன. பெர்ரி, திராட்சை, ஆப்பிள் பழங்களின் சாறுகள் கலந்த கலவையில் இதய நோய்களை தவிர்ப்பதற்கான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 

பாலி பீனால் கூட்டுப் பொருள் நிறைந்த தாவரம் இதய ரத்தக் குழாய்கள் பழுதடையாமல் பாதுகாக்கவும், இதயத்தை பாதுகாக்கவும் உதவுகிறது என பல்வேறு ஆய்வுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

தற்போது பிரெஞ்சு விஞ்ஞானிகள் 13 வித பழ ரசத்தின் கலவைகள் இதய பாதுகாப்புக்கு வெகுவாக உதவுகின்றன என கூறியுள்ளனர். திராட்சை, ஆப்பிள், பெர்ரி, செர்ரி வகை போன்ற பழவகைகளின் கலவையை அருந்துவது இதயத்திற்கு நல்லது என பிரெஞ்சு விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். 

பழக்கலவையின் 60 சதவீதத்தை திராட்சை ரசம் எடுத்துக் கொள்கிறது. பழக்கலவை ஆய்வை மேற்கொண்ட ஸ்டாஸ் போர்க் பல்கலைகழகத்தின் தலைமை ஆய்வாளர் டொக்டர் சிரில் ஆகர் கூறுகையில்,"பழவகைக்கலவை ருசியாக இருப்பதுடன் கண்ணைக் கவரும் நிறத்துடன் இதயத்தை பாதுகாப்பதாக உள்ளது" என்றார். 

இதயத்தை பாதுகாக்கும் பழக்கலவையில் ஏசர்ரோலா 4 சதவீதம், ஆப்பிள் 10 சதவீதம், திராட்சை 63 சதவீதம், லிங்கோ பெர்ரி 5 சதவீதம், அரோனியா 4 சதவீதம், ப்ளு பெர்ரி 10 சதவீதம், ஸ்டாபெர்ரி 10 சதவீதம் என்ற கலவையில் உள்ளன.


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "இதயம் காக்கும் பழக்கலவை"

Post a Comment