தலைப்புச் செய்தி

Monday, February 7, 2011

இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல

சமீப காலங்களாக செய்திகளிலும் அல்லது எதை திறந்தாலும் அடிபடுவது ஊழல்கள் பற்றி,


எந்த கட்சிகளும் பாரபட்சமின்றி தன் பங்கிற்கு இந்தியாவில் செய்தாகி விட்டது ஊழல்களை,

அது அவ்வப்போது வரும் பின்பு நாம் மறந்துவிடுகிறோம்.

அந்த வகையில் இந்திய அரசு சுவிஸ் அரசிடம் கேட்கும் இந்தியர்களின் கருப்பு பணம் பற்றிய விடயம்தான் நான் எழுதுவது,

சுவிஸ் வங்கியில் உள்ள தொகை

280,00,000,000,0000 - 280 லட்சம் கோடி - இந்தியர்களது பணம் மட்டும்

இந்த தொகையை வைத்து கீழுள்ள மதிப்பீடு செய்யப்பட்ட ஒரு மின்னஞ்சல் வந்தது எனக்கு, அது அப்படியே தருகிறேன்

30 வருடத்திற்க்கு வரியில்லாத இந்திய பட்ஜெட் போட முடியுமாம்

60 கோடி வேலைவாய்பை ஏற்படுத்த முடியும் நமது நாட்டில்

எந்த கிராமத்திலிருந்தும் புது டெல்லிக்கு நான்கு வழி சாலைகள் அமைக்க முடியும்

500 பொது நல திட்டங்கள் இலவசமாக தரமுடியும்

20 கோடி மாணவர்களுக்கு 50 வருடங்களுக்கு இலவச கல்வி தரமுடியும்

ஒவ்வொரு இந்தியனும் 2000/-ரூபாய் மாதாமாதம் 60 வருடத்திற்கு பெறமுடியும்

உலக வங்கியிடமும், IMF யிடமும் நாம் எதிர்பார்க்க வேண்டியதில்லை

சிந்தியுங்கள் நமது பணம் எப்படி பெரும் பண முதலைகளிடமும், அரசியல் வாதிகளிடம் அடைபட்டுள்ளது என்று

மேலும் காமென்வெல்த் ஊழல்கள், ஆதர்ஷ் கட்டட ஊழல், 2G அலைகற்றை ஊழல், கர்நாடகா எதியூரப்பா ஊழல்கள்...மற்றும் பல பல.......... உள்ளன அவைகளை நாம் இங்கு சேர்க்க வில்லை.

இதை அனுப்பி தந்த நண்பர் ஹாஜா அவர்களுக்கு நன்றிகள் பல.

இப்பொழுது சொல்லுங்கள் இந்தியா ஏழை நாடா?????

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல"

Post a Comment