தலைப்புச் செய்தி

Monday, February 7, 2011

கைது அச்சத்தால் சுவிஸ் பயணத்தை இரத்துச் செய்த புஷ்!

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ். இவர் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாநகரில் ஒரு அறக்கட்டளை ஏற்பாடு செய்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.


இந்த நிகழ்ச்சி வருகிற 12-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள ஜார்ஜ்டபிள்யூ புஷ் தயாராக இருந்தார்.

ஆனால், அவர் மீது ஜெனீவா கோர்ட்டில் மனித உரிமைகள் அமைப்பு ஒரு வழக்கு தொடர்ந்தது. அவர் அமெரிக்க அதிபராக இருந்த போது குவான்ட்னமோ வளைகுடா பகுதியில் தீவிரவாதிகள் என சந்தேகப்பட்ட நபர்களை சித்ரவதை செய்து மனித உரிமை மீறியுள்ளார்.

எனவே அவரை கைது செய்ய வேண்டும் என தெரிவித்து இருந்தனர். அதை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு அவரை கைது செய்யும்படி சுவிட்சர்லாந்து அரசுக்கு உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து அங்கு சென்றால் கைது செய்யப்படுவோம் என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டது. இதனால் சுவிட்சர்லாந்து பயணத்தை அவர் திடீரென ரத்து செய்தார்.

ஆனால், சுவிட்சர்லாந்து வந்தால் அவர் கைது செய்யப்பட மாட்டார். விருந்து விழா நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் மகிழலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "கைது அச்சத்தால் சுவிஸ் பயணத்தை இரத்துச் செய்த புஷ்!"

Post a Comment