தலைப்புச் செய்தி

Saturday, February 5, 2011

எகிப்தில் சர்வதேச மன்னிப்புச் சபை உறுப்பினர்கள் கைது!

சர்வதேச மன்னிப்புச் சபையின்( Amnesty International )முக்கியஸ்தர்கள் மூவரை எகிப்தின் இராணுவ பொலிஸார் கைது செய்திருக்கின்றனர். அடக்கு முறைக்கு எதிரான மக்களின் போராட்டம் எகிப்தில் வலுப்பெற்று வரும் இத்தருணத்தில் மனித உரிமை ஆர்வலர்களின் செயற்பாட்டிற்கு தடைவிதிக்காமல் நிபந்தனையுமின்றி அவர்களை விடுவிக்குமாறு சர்வதேச மன்னிப்புச் சபை வீழ்ந்துக் கொண்டிருக்கும் முபாரக் அரசிடம்வேண்டுகோள் விடுத்திருக்கிறது.


சர்வதேச மன்னிப்புச் சபையின் முக்கிய உறுப்பினரோடு ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் (Human Rights Watch)அமைப்பைபின் பிரதிநிதியான ஸைபுல் இஸ்லாம் காலித் அலீயும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், தற்போது அவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற தகவல் இதுவரை தமக்கு தெரியாமல் இருப்பதாகவும் மேற்படி சபை அறிவித்திருக்கிறது.

சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் சலில் ஷெட்டி (Salil Shetty )தமது உறுப்பினர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறும், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு இடையூறாகசெயற்படவேண்டாமென்றும் எகிப்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "எகிப்தில் சர்வதேச மன்னிப்புச் சபை உறுப்பினர்கள் கைது!"

Post a Comment