தலைப்புச் செய்தி

Tuesday, February 1, 2011

எகிப்திலிருந்து 300 இந்தியர்களுடன் மும்பை வந்திறங்கியது ஏர்-இந்தியா விமானம்! .

கலவர பூமியாக மாறியிருக்கும் எகிப்திலிருந்து பத்திரமாக இந்தியர்களை மீட்டுவர புறப்பட்டு சென்ற


ஏர் இந்தியா விமானம் இன்று மாலை 300 இந்தியர்களுடன் மும்பை CST விமானநிலையத்தில் தரையிறங்கியது.

போயிங் 747-800 எனும் இவ்விமானம் எகிப்து தலைநகர் கெய்ரோவிலிருந்து நேற்று புறப்பட்டது. இதேவேளை மீதமுள்ளவர்களை கொண்டுவருவதற்கு மும்பை ஜெத்தாஹ் விமானங்களை கெய்ரோவுக்கு அனுப்புவதற்கு ஏர்-இந்தியா நிறுவனம் தீர்மானித்துள்ளது.

தற்போதைய கணிப்பின் படி 600 இந்தியர்கள் எகிப்திலிருந்து தாய்நாட்டிற்கு திரும்புவதற்காக இன்னும் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் சுற்றுலா நிமித்தமும், வேலை நிமித்தமும் அங்கு சென்றவர்கள் என அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. வேறு நாடுகள் பலவும் இவ்வாறு தங்கள் நாட்டவர்களை அங்கிருந்து மீட்டெடுக்கும் பணியிலல் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "எகிப்திலிருந்து 300 இந்தியர்களுடன் மும்பை வந்திறங்கியது ஏர்-இந்தியா விமானம்! ."

Post a Comment