தலைப்புச் செய்தி

Sunday, January 16, 2011

குடிக்காமல் உலறும் காஞ்சி சங்கராச்சாரியார்!!!

காஞ்சிபுரம்,ஜன.15:பொங்கல் திருநாளையொட்டி காஞ்சிபுரத்தில் பேட்டியளித்த காஞ்சி காமக்கோடி ஜெயேந்திரனின் உளறல்கள்.


உளறல் 1. விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வருமான வளர்ச்சியால்தான் விலைவாசி உயர்ந்ததாக கூறக் கூடாது. விலைவாசியைக் குறைக்க காய்கறிகள் மற்றும் உணவுப் பொருள்கள் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும். அவைகளை உற்பத்தி செய்வதற்கு தேவைப்படும் உரம் முதலிய மூலப் பொருள்களுக்கும் அதிக அளவு மானியம் வழங்க வேண்டும்.

உளறல் 2. அயோத்தி பிரச்னை சுமூகமாக தீர வேண்டும் என்பதற்காக கடந்த மாதம் 27-ம் தேதி புனேவில் நான் இமாம்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினேன். முதலில் அயோத்தி பிரச்னையை பேசி தீர்த்துக் கொள்வோம். பின்னர் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மசூதிகளில் தொழுகை நடத்த முடியாத நிலை உள்ளது. அங்கு தொழுகை நடத்துவதற்கு அனுமதி வாங்குவதற்கான முயற்சிகளை எடுப்போம் என்றேன். அவர்கள் முதலில் உடன்பட்டு சென்றனர். பின்னர் அவரவர்கள் உச்சநீதிமன்றத்துக்கு சென்று விட்டனர். அதனால் பேச்சு வார்த்தை பலனில்லாமல் ஆகிவிட்டது.

உளறல் 3. ஆந்திரத்தை பிரிக்கலாம்' தெலுங்கானா கோரிக்கை என்பது நீண்ட நாள் கோரிக்கை. சண்டிகரைப்போல் ஹைதராபாதை தெலுங்கானாவுக்கும், ஆந்திரத்துக்கும் பொது தலைநகராக வைத்து ஆந்திரத்தைப் பிரிக்கலாம். ஹைதராபாத்தை தெலுங்கானாவுடன் மட்டும் சேர்த்து தனி தெலுங்கான உருவாக்குவது ஆபத்தானது. ஹைதராபாத் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறும் அபாயம் ஏற்படும் என்றார் ஸ்ரீஜயேந்திரர்.

காம...கோடியின் காறி உமிழவைக்கும் உளறல் பேட்டியை பற்றி அலசுவோம்:

1.விலைவாசி உயர்வதற்கு வருமான வளர்ச்சி என்று கூறக்கூடாதாம். அது சரி அப்ப காரணம் என்னவென்று சொல்ல வேண்டியதுதானே? நீ என்ன பதுக்கல் காரர்களுக்கும், வெளிநாட்டு தரகு முதலாளிகளுக்கும் பினாமியா?

அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை உயர்வுக்கு காரணம் பதுக்கலும், அரசின் விநியோகத்தில் ஏற்பட்ட குளறுபடியும்தான். அதுமட்டுமல்லாமல் இந்த விலைவாசி உயர்வுக்கு, வெளிநாட்டு தரகு முதலாளிகளான வால்மார்ட்டையும், டெலஸ்கோவையும் சில்லரை வியாபாரத்தில் நுழையவிடுவதற்கான தந்திரம் என்றுதான் நடுநிலையாளர்கள் கூறுகிறார்கள்.

உரத்தையும்,மூலப்பொருட்களையும் மானியமாக வழங்க வேண்டுமென்று கூறும் நீ இந்நாட்டில் பல ஆண்டுகளாக எத்தனையோ விவசாயிகள் தற்கொலைச் செய்ததற்கு ஏதாவது பரிகாரம் கூறினாயா? அல்லது திருஷ்டிதான் கழித்தாயா? அல்லது இந்தியாவில் ஏழைகள் படும் அவஸ்தைக்கு தீர்வைக் கண்டறிந்தாயா? உனக்கும் உனது அவாள்களுக்கும் காய்கறி வேண்டுமென்பதற்காக இப்பொழுது ரொம்ப கரிசனம் வந்துவிட்டதோ?

2.அயோத்தி பிரச்சனையில் வி.ஹெச்.பியின் பினாமிதான் நீ என்பது ஊரறிந்த ரகசியம். இந்நிலையில் சமாதானம் பேசலாம் என நாடகமாடி சதிவேலை செய்ய நீ திட்டமிட்டதை உணர்ந்துக் கொண்ட முஸ்லிம் தலைவர்கள் மேல் முறையீடு செய்வதுதான் ஒரே வழி என புரிந்துக் கொண்டனர். இதற்கிடையில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பினாமியான உனக்கு ஏன் பொத்துக்கொண்டு வருகிறது?

3.தெலுங்கானாவை பிரிக்கும்பொழுது ஹைதராபாத்தை அத்துடன் சேர்க்கக் கூடாதாம். தீவிரவாதிகளின் மையமாகிவிடுமாம். கூ முட்டை! உனக்கு புத்தி எங்கடா போச்சு! பத்திரிகையையெல்லாம் படிப்பதே கிடையாதா? உனக்கு கூத்தடிக்கவே நேரம் பத்தலை! பத்திரிகை படிக்க எங்க நேரம்! உனது உற்றத் தோழர்களான ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்தான் ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் குண்டுவைத்தார்கள் என்பது உனக்கு தெரியாதா என்ன? அப்ப நீ ஹிந்துத்துவாவின் பயங்கரவாத மையமாக ஹைதராபாத் மாறிவிடும் எனக் கூறவருகிறாயா? நீயே ஒரு பயங்கரவாதி! சங்கரராமன் கொலை வழக்கையையும் நீ போட்ட காம, கொலை வெறியாட்டங்களையும் தமிழக மக்கள் மறந்துவிடுவார்கள் என்று நினைத்தாயோ? முட்டாள் கம்முனு கிட.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "குடிக்காமல் உலறும் காஞ்சி சங்கராச்சாரியார்!!!"

Post a Comment