தலைப்புச் செய்தி

Sunday, January 9, 2011

சட்டப்பேரவை தேர்தலுக்கு இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியாகிறது


சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நாளை 50 ஆயிரம் இடங்களில் வெளியிடப்படுகிறது. புதிதாக 13 லட்சம் பேர் வாக்காளர் பட்டிய லில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார். தமிழகம் முழுவதும¢ ஜனவரி 1ம் தேதியை தகுதி அடிப்படை நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் 25ம் தேதி வெளியிடப்பட்டது.


அந்த பட்டியலில் பெயர் சேர்ப்பு, பெயர் திருத்தம், முகவரி மாற்றம் போன்றவை இருந்தால், அவற்றிற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நவம்பர் 13ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அலுவலகம் அறிவித்தது. இதற்காக தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்ட பள்ளி கள், அரசு அலுவலகங்களில் இந்த முகாம்கள் நடந்தன. இங்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வழங்கப்பட்டதுடன், புதிய விண்ணப்பங்களும் பெறப்பட்டன. இதில் ஏராளமானோர் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், பெயர் சேர்ப் பிற்கான விண்ணப்பங்களை வழங்கினர்.

தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் வீடு, வீடாக சென்று முழுமையாக பரி சீலனை செய்யப்பட்டன. அதை தொடர்ந்து வாக்காளர்களின் முழு விவரங்களும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டி முடிந் துள்ளது. நாளை (10ம் தேதி) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியதாவது: தமிழகம¢ முழுவதும் 234 சட்டசபை தொகுதிகளிலும் நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

கலெக்டர் அலுவலகம், போலீஸ் நிலையங்கள், ஆர்டிஓ அலுவ லகம், தாலுகா அலுவலகங்கள், ஓட்டுப்பதிவு நடைபெறும் இடங்கள் என்று 50 ஆயிரம் இடங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வாக்காளர் பட்டியல் வைக்கப்படும். பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என சரி பார்த்து கொள்ளலாம். தமிழகத்தில் ஏற்கனவே 1.49 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இப்போது, புதிதாக 13 லட்சம் பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம், ஆண், பெண் வாக்காளர்கள் விவரம் 10ம் தேதி இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார். சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னையில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 29 லட்சத்து 31 ஆயிரமாகும்(ஏற்கனவே உள்ள புள்ளி விவரப் படி). இறுதி வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். இதனால் சென்னை வாக்காளர் எண்ணிக்கை உயரும்’’ என்றனர்.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "சட்டப்பேரவை தேர்தலுக்கு இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியாகிறது"

Post a Comment