தலைப்புச் செய்தி

Sunday, January 23, 2011

சிறுவர்களுக்கு மொபைல் போன் வேண்டாம் : மன உளைச்சலுக்கு ஆளாவதாக எச்சரிக்கை

வயதுக்கு வராத சிறுவர், சிறுமிகள், மொபைல் போன் மற்றும் சமூக வலைத் தளங்களை பயன்படுத்துவதால், விரைவிலேயே காதலில் விழுந்து விடுகின்றனர்.


இதனால், மன உளைச்சல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை அவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது 'என, உளவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சமீபகாலமாக, வயதுக்கு வராத சிறுவர், சிறுமிகள் மொபைல் போன் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. வசதி படைத்தவர்களின் வீட்டு பிள்ளைகள், சமூக வலைத் தளங்களையும் பயன்படுத்துகின்றனர்.

இது போன்ற காரணங்களால் அவர்களுக்கு பா திப்பு ஏற்படுவதாக, உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மும்பையைச் சேர்ந்த உளவியல் நிபுணர் டாக்டர் அஞ்சலி சப்தாரியா கூறியதாவது: சமீபத்தில் 15 வயது சிறுமியை, பெற்றோர் என்னிடம் அழைத்து வந்தனர்.

அவள் கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாள். அவளிடம் விசாரித்தபோது, பல அதிர்ச்சி அளிக்கும் விஷயங்கள் தெரியவந்தன.

அந்த சிறுமி கூறுகையில்,

"மொபைல் போன் மூலமாக, எனக்கு ஒரு தோழன் கிடைத்தான். அவன் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தேன். ஆனால், தற்போது அவன், என்னுடன் பேசுவதை விட்டு விட்டு, வேறு ஒரு பெண்ணுடன் சுற்றுகிறான்.

இதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை' என்றாள். சமீபகாலமாக இது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறு அஞ்சலி கூறினார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "சிறுவர்களுக்கு மொபைல் போன் வேண்டாம் : மன உளைச்சலுக்கு ஆளாவதாக எச்சரிக்கை"

Post a Comment