பத்தணம்திட்டா,ஜன.9:கேரள மாநிலம் பத்தணம் திட்டா மாவட்டத்தில் முளகுளா என்ற இடத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட அஞ்சலி கிருஷ்ணா(வயது 22) என்ற பெண்ணின் பா.ஜ.க தலைவர் வி.எஸ்.பிஜு என்பவரின் அடியாட்கள் பைக்கில் வந்து ஆசிட் வீசினர். இதில் கடுமையாக காயமடைந்த அவர் கவலைக்கிடமான சூழலில் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை(8/01/2011) ஒன்பதரை மணிக்கு பைக்கில் வந்த இரு கூலிபடை இளைஞர்கள் அஞ்சலியின் வீட்டில் போன் செய்து ஒரு பார்ஸல் கொரியரில் வந்திருப்பதாகவும், வீடு தெரியாததால் வெளியே வந்து நிற்கவும் என கூறியுள்ளனர். வீட்டை விட்டு வெளியே வந்த அஞ்சலியின் முகத்தில் ஆசிட்டை வீசியுள்ளனர்.இதனால் கடுமையாக காயமடைந்த அஞ்சலி மருத்தவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார். ஆசிரியராக பணிபுரிந்துவரும் அஞ்சலிக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடக்கவிருப்பது குறிப்பிட தக்கது. இதுத் தொடர்பாக அப்பகுதி போலீசார் உடனடியாக இந்த அக்கிரம செயலுக்கு காரணமான உள்ளூர் பா.ஜ.க தலைவர் வி.எஸ்.பிஜு என்பவர் மீது வழக்கு பதிவுச் செய்துள்ளனர். கடந்த பஞ்சாயத்து தேர்தலில் இவர் பா.ஜ.க சார்பாக போட்டியிட்டார். இதுதான் வர்ணாசிரம ஹிந்த்துவாவோ கொள்கையோ!!!





0 comments: on "இளம்பெண்ணின் மீது ஆசிட் வீச்சு: ஹிந்த்துதுவா காலிகள் அராஜகம்."
Post a Comment