புதுடெல்லி,ஜன.16:டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித், டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் இமாம் அஹ்மத் புஹாரி ஆகியோர் மீது ஜங்புரா ரெசிடண்ட்ஸ் வெல்ஃபயர் அசோசியேசன்(ஜெ.ஆர்.டபிள்யூ.எ) நீதிமன்ற அவமதிப்பு புகார் மனுவை அளித்துள்ளது.
டெல்லி வளர்ச்சி ஆணையம் கைப்பற்றிய நிலத்தில் அத்துமீறி நுழையவும், வழிப்பாடுகளை நிறைவேற்றவும் தூண்டியதுத் தொடர்பாக இவர்களிருவர் மீதும் நீதிமன்றத்தை அவமதித்ததற்காக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அம்மனுவில் கோரப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் ஆர்.கே.சைனி மூலமாக இம்மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாதியமஹால் எம்.எல்.ஏ சுஹைப் இக்பால், ஓக்லா எம்.எல்.ஏ ஆஸிஃப் முஹம்மது கான் ஆகியோருக்கெதிராக நீதிமன்றம் சுயமாகவே நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை துவக்கவும் அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
மஸ்ஜித் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டது எனவும், அங்கு ஒரு சமூக மையம் அமைக்க திட்டமிட்டிருப்பதாகவும் அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. மஸ்ஜிதை இடித்துவிட்டு அந்த நிலத்தை கையகப்படுத்திய பிறகு நீதிமன்ற உத்தரவை புறக்கணிக்கும் நடவடிக்கைகளை தடுக்கக்கோரும் மனுவை டெல்லி வளர்ச்சி ஆணையம் உயர்நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை சமர்ப்பித்திருந்தது.
உயர்நீதிமன்ற உத்தரவின்படி மஸ்ஜித் இடிக்கப்பட்டதாக டி.டி.எ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்




0 comments: on "டெல்லி இமாம், முதல்வர் ஷீலா தீட்ஷித் மீது நீதிமன்ற அவமதிப்பு புகார்"
Post a Comment