தலைப்புச் செய்தி

Tuesday, January 4, 2011

தொடர் குண்டு வெடிப்புகள் கேரளாவில் திட்டமிடப்பட்டுள்ளது: அதிர்ச்சி தகவல்.

கோழிக்கோடு,ஜன.3:அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு மற்றும் தொடர் குண்டு வெடிப்புகள் தொடர்புடைய கேரளாவைச் சார்ந்த RSS அமைப்பின் சுரேஷ் நாயருக்கு நெருக்கமானவர்கள் 20பேரின் விபரங்களை மாநில உள்துறை பாதுகாப்பு படை (ஐ.எஸ்.டி) சேகரித்துள்ளது. இதில் பலரையும் ஆரம்ப கட்ட விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது. சுரேஷ் நாயர் சிக்கினாரா? இல்லையா? என்பதுக் குறித்து ராஜஸ்தான் ஏ.டி.எஸ் மாறுபட்ட தகவல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் கேரளாவில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. மாநில போலீசாரோ, க்ரைம் பிராஞ்சோ சம்பந்தப்படாமால் இந்த விசாரணை நடந்து வருகிறது. இந்தியாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் அனைத்தும் கேரளாவில் திட்டமிடப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுரேஷ் நாயர் உடன் தொடர்புடையவர்களில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களும், பிரச்சாரக்குகளுமாவர். சுரேஷ் நாயர் கேரளாவில் வசிக்கும் தனது குடும்பத்தினருக்கு தெரியாமலேயே பலமுறை அம்மாநிலத்திற்கு வந்து சென்றுள்ளார் எனவும், பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செயற்குழு மூத்த உறுப்பினரான இந்திரேஷ் குமாருடனும் அவர் கேரளாவிற்கு வந்துள்ளார் என்ற தகவலும் ஐ.எஸ்.டிக்கு கிடைத்துள்ளது.

கேரளாவின் பல மாவட்டங்களிலும் நாச வேலைகளில் ஈடுபடும் நபர்களை தேசிய அளவில் நாசவேலைகளை நடத்துவதற்கு தேர்வுச் செய்யத்தான் சுரேஷ் நாயர் கேரளாவிற்கு வந்துள்ளார்.இதற்கிடையே சுரேஷ் நாயர் ராஜஸ்தான் ஏ.டி.எஸ் வசம் சிக்கியதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று கூறுகிறது. இவர் அளித்த விபரங்களின் அடிப்படையில்தான் ஐ.எஸ்.டி விசாரணையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளையில்,சுரேஷ் நாயரின் கேரள மாநிலத் தொடர்புக் குறித்த விசாரணையை சீர்குலைக்க சிலர் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "தொடர் குண்டு வெடிப்புகள் கேரளாவில் திட்டமிடப்பட்டுள்ளது: அதிர்ச்சி தகவல்."

Post a Comment