உத்தரபிரதேச மாநிலம் ஜதான் பகுதியைச் சேர்ந்தவர் பசந்த் சிங். 50 வயதான இவரின் மீசை 3 3/4 அடி நீளமுடையது.
அங்குள்ள கூட்டுறவு கமிட்டியில் பணியாற்றும் இவரை பசந்த் சிங் என்றால் யாருக்கும் தெரியாது.
`மீசைக்காரர்' என்றால்தான் எளிதில் தெரியும். அவர் கூறுகையில், 30 வருடத்துக்கு முன்பு விளையாட்டாக மீசை வளர்க்கத் தொடங்கினேன். பெரிதாக வளர்க்கலாமே என்று தொடங்கி இன்றைக்கு 3 3/4 அடி நீளத்துக்கு வளர்த்து உள்ளேன்.
ஆரம்பத்தில் மீசையை பராமரிப்பதில் சில பிரச்சினைகள் இருந்தது. இப்போது அதுவே எனக்கு பொழுது போக்காக ஆகி விட்டது. இன்றைக்கு என்னை மீசைக்காரன் என்றுதான் எல்லோரும் அழைக்கிறார்கள் என்று தெரிவித்தார்.





0 comments: on "உத்தரபிரதேசத்தில் 3 3/4 அடி நீளம் கொண்ட மீசைக்காரர்"
Post a Comment