தலைப்புச் செய்தி

Wednesday, December 29, 2010

காங்கிரஸை எதிர்ப்பத அல்லது ஹிந்த்துவாவை பாதுகாப்பதா? பாரதிய ஜனதாவில் குழப்பம்.

புதுடில்லி : ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என்ற பா.ஜ., கட்சித் தலைவர்களின் நிலைப்பாட்டில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பா.ஜ., மூத்த தலைவர்கள் முரளிமனோகர் ஜோஷிக்கும், சுஷ்மா சுவராஜுக் கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக, கட்சிக்குள் மோதல் முற்றியுள்ளது.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு காரணமாக, அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் அளித்த அறிக்கை, தேசிய அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இதன் காரணமாக, மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ராஜா, பதவி விலகினார். இருந்தாலும், எதிர்க்கட்சியினர் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து தீவிரப் படுத்தினர். இதனால், பட்ஜெட்கூட்டத்தொடரும் முடக்கப்படும்அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பு நடத்திய தொடர் குண்டு வெடிப்புகள் குறித்த விசாரணையை காங்கிரஸ் நிறுத்தி வைபதாக பேரம் பேசி பாரதிய ஜனதாவை பாராளுமன்ற நடவடிக்கைகளில் ஒத்துழைக்கும்படி கேட்டு கொண்டிருப்பதாக புலனாய்வு பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் பாரதிய ஜனதாவில் ஒரு குரூப் பாராளுமன்ற நடவடிக்கைகளை முடக்கவேண்டும் என்றும், இன்னொரு குரூப் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் மேல் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகளை நிறுத்தி ஹிந்துத்துவாவை பாதுகாக்க முடியும் என்றும் இரட்டை கருத்து ஏற்பட்டுள்ளது. இதானால் பாரதிய ஜனதா கட்ச்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "காங்கிரஸை எதிர்ப்பத அல்லது ஹிந்த்துவாவை பாதுகாப்பதா? பாரதிய ஜனதாவில் குழப்பம்."

Post a Comment