தலைப்புச் செய்தி

Thursday, September 23, 2010

அயோத்தி தீர்ப்பு: 3 நாட்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பத் தடை

அயோத்தி தீர்ப்பையொட்டி தவறான வதந்திகள் பரவுவதைத் தடுக்க, பல்க் எஸ்எம்எஸ் அனுப்ப 3 நாட்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் வரும் 24.09.2010 அன்று தீர்ப்பு வழங்க உள்ளது.


இந்த வழக்கில் தீர்ப்பு யாருக்கு சாதகமாக இருந்தாலும், யாரும் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடாமல், அமைதி காக்க வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தீர்ப்பு வெளியாவதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் அயோத்தி தீர்ப்பையொட்டி பல்க் எஸ்எம்எஸ் அனுப்ப 3 நாட்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக எஸ்எம்எஸ், எம்எம்எஸ் அனுப்ப வரும் சனிக்கிழமை வரை நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 
தவறான வதந்திகள் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அயோத்தி தீர்ப்பு: 3 நாட்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பத் தடை"

Post a Comment